பக்தாதில் வீசும் காற்று
என் பக்கம் வந்தது
மனம் மயங்கி போனது
காற்றே செல்... எந்தன் ஏக்கம் சொல் (×2)
என் கண்களை அனைத்தேனே
கண்ணீராய் கவிதைகள் அமைத்தேனே
இரு கரங்களை விரித்தேனே
யா மதத் குத்துபென்று அழைத்தேனே (×2)
ரழியல்லாஹு அன் அப்துல் காதிர்... யா காதிர்...
ரழியல்லாஹு அன் கவ்துல் அஃழம்... யா முஹ்யித்தீன் (×2)
பக்தாதில் வீசும் காற்று
என் பக்கம் வந்தது
மனம் மயங்கி போனது
காற்றே செல்... எந்தன் ஏக்கம் சொல் (×2)
என் நிலையை மறந்தாலும்
விதி வழி வலிகளும் அமைத்தாளும்
என் வலிகளால் வழி தோன்றும்
தூயவரின் ஒளியால் துயர் தீரும் (×2)
பக்தாதில் வீசும் காற்று
என் பக்கம் வந்தது
மனம் மயங்கி போனது
காற்றே செல்... எந்தன் ஏக்கம் சொல் (×2)
உங்கள் புகழை பாடிடுவோர்
பாருலகில் நிதமும் ஒரு கோடி
அதில் ஒருவனாய் நான் வாழ்வேன்
ஓயாத கவிபுகழ் கோர்த்திடுவேன்(×2)
ஏழை எந்தன் கவிதைகள் புகழ்பாடும்
என்று நினைத்தேன்
மாறாக என் கவிதை உங்களினால்...
புகழ் அடைந்ததே (×2)
பக்தாதில் வாழும் சுல்தான்
என் அப்துல் காதிரே
என் உயிரின் ஜோதியே
காற்றே செல்... எந்தன் ஏக்கம் சொல் (×2)